search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீலகிரி மழை"

    கோத்தகிரியில் பெய்த பலத்த மழையால் சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஊட்டி உள்பட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக அவலாஞ்சி, கோடநாடு, கிண்ணக்கொரை, குந்தா உள்ளிட்ட இடங்களில் அதிக மழை பதிவானது.

    நேற்று ஊட்டி நகரில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. கடும் பனி மூட்டம் நிலவியதால் சில சாலைகளில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகனங்களை இயக்கினர். கூடலூரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வபோது சாரல் மழை தூறியது.

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒரு சில இடங்களில் லேசான மண்சரிவுகள் மற்றும் சாலைகளில் மரங்கள் சாய்ந்து விழுந்தது. இந்த நிலையில் நேற்று பலத்த மழை பெய்தது. காலை 7 மணி அளவில் கோத்தகிரியில் இருந்து அளக்கரைக்கு செல்லும் சாலையின் குறுக்கே மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் கணேசன், உதவி செயற்பொறியாளர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த மரத்தை மின் வாளால் வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    இதேபோல கோத்தகிரியில் இருந்து கூடநாட்டிற்கு செல்லும் சாலையின் குறுக்கே காட்டு மரம் ஒன்று விழுந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை அகற்றி, போக்குவரத்தை சீர் செய்தனர்.

    பந்தலூர் தாலுகாவில் மேங்கோரேஞ்ச், சேரம்பாடி, எருமாடு, அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, பொன்னானி உள்ளிட்ட பல இடங்களில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதனால் கால்வாய்கள் மற்றும் பொன்னானி, சோலாடி ஆறுகளிலும், நீரோடைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் பந்தலூர், கொளப்பள்ளி, அய்யன்கொல்லி பகுதிகளில் மின்கம்பிகள் மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்து மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். மரக்கிளைகளை அகற்றி மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

    ஊட்டி-20.2, கல்லட்டி-20, கிளன்மார்கன்-33, மசினகுடி-16, குந்தா-39, அவலாஞ்சி-66, எமரால்டு-30, கெத்தை-42, கிண்ணக்கொரை-65, அப்பர்பவானி-35, பாலகொலா-40, குன்னூர்-37.5, பர்லியார்-16, கேத்தி-18, எடப்பள்ளி-37, கோத்தகிரி -28, கீழ் கோத்தகிரி-31, கோடநாடு-40, கூடலூர்-28, பாடாந்தொரை-23, பந்தலூர்-38 மழை பதிவாகி உள்ளது.

    நீலகிரியில் தொடர் மழை மற்றும் கடுங்குளிரால் சுற்றுலா தலங்களான அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கடுங்குளிர் பொதுமக்களை வாட்டி வருகிறது. அடர்த்தியான மேக மூட்டம் நிலவுவதால் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிர விட்டவாறு செல்கின்றன.

    தொடர்மழையால் நீலகிரியில் உள்ள பைக்காரா, காமராஜர் சாகர், குந்தா, எமரால்டு, அவலாஞ்சி, அப்பர் பவானி, டைகர் ஹில்ஸ் உள்ளிட்ட 14 அணைகளும் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. காட்டேரி, கல்லட்டி, கேத்ரின் உள்ளிட்ட நீர் வீழ்ச்சிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    தொடர் மழை மற்றும் கடுங்குளிரால் சுற்றுலா தலங்களான அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி பொதுமக்கள் வெளியே நடமாட முடியாமலும், பண்டிகை பொருட்கள் வாங்க முடியாமலும் முடங்கியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தீபாவளியை பண்டிகை மழையால் களை இழந்து காணப்படுகிறது.

    கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.நேற்று இரவு மேட்டுப்பாளையத்தில் அதிகபட்சமாக 20 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    கோவை-திருப்பூர்-நீலகிரியில் கொட்டி தீர்த்த மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. #rain

    கோவை:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றும் பலத்த மழை கொட்டியது. இதனால்தாழ்வான பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தன. ஊட்டி மாநகராட்சி மார்க்கெட் தண்ணீரில் மிதந்தது.

    கோடப்பமந்து கால்வாய் நிரம்பி ஊட்டி மத்திய பஸ்நிலையம், ரெயில்வே பாலத்தின் அடியில் தண்ணீர் தேங்கியதால் கார், ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனமும் செல்ல முடியவில்லை. மேலும் பாலத்தை ஓட்டியுள்ள ரெயில்வே போலீஸ் நிலையம் தண்ணீரில் மூழ்கியது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் மின்சாரம், தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் ஊட்டி நகரம் இருளில் மூழ்கியது.

    தொடர் மழை காரணமாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடுங்குளிர் நிலவியது. கோடைவிழாவின் ஒரு பகுதியாக ஊட்டியில் தேயிலை மற்றும் சுற்றுலா விழா, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்க இருந்தது. இதற்காக 18 காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தொடர் மழையால் அரங்குகளுக்குள் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.

    ஊட்டியில் பெய்து வரும் தொடர்மழையால் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் போன்ற சுற்றுலா தலங்களுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மழையில் நனையாமல் இருக்க குடைபிடித்தபடி சென்றனர். பலத்த மழை காரணமாக படகு இல்லத்தில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. ஊட்டி சுற்று வட்டார பகுதிகளான லவ்டேவ் காந்திப்பேட்டை, கேத்தி, தலைகுந்தா, பைக்காரா, கல்லட்டி, காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    இதேபோல் கோவையிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலையில் கோவை உள்பட புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. இதன் காரணமாக இரவில் கடுங்குளிர் மக்களை வாட்டி வதைத்தது.

    கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன்(வயது 45). இவர் தனது நண்பரான அய்யப்பன் என்பவருடன் இணைந்து கியாஸ் கம்பெனி மற்றும் இடிகரைரோடு மகாராஜா நகரில் மர தொழிற்சாலை நடத்தி வருகிறார். இதையொட்டி இடிகரை ரெயில்வே கிராசிங் அருகில் ஒரு மரகுடோன் அமைத்திருந்தனர். அதில் மர தொழிற்சாலைகளில் தயாரிக்கும் கதவு, ஜன்னல் மற்றும் உதிரி பொருட்களையும் இருப்பு வைப்பது வழக்கம்.

    இரவு அந்த பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது திடீரென அந்த மர குடோன் மீது மின்னல் தாக்கியது. இதில் குடோனில் இருந்த மரப்பொருட்களின் மீது தீப்பற்றி எரிய தொடங்கியது.

    அக்கம் பக்கத்தினர் கோவை வடக்கு தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு 15 தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் விற்பனைக்காக வைத்திருந்த 2 ஆயிரத்து 400 மர கதவுகள் உள்பட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமாகின. இதன் மதிப்பு 1½ கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

    திருப்பூரிலும் நேற்று மாலை 5 மணி முதல் 7 மணி வரை பலத்த மழை கொட்டியது. தொடந்து சாரல் மழை பெய்தது. இதேபோல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. #rain

    ×